search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியூர் அருகே தீக்காயம் அடைந்த  முதியவர் சாவு
    X

    ஏரியூர் அருகே தீக்காயம் அடைந்த முதியவர் சாவு

    • மண்எண்ணைய் விளக்கின் தீ எதிர்பாராதவிதமாக இவர் மீது பட்டது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்துள்ள கூர்க்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது70). சம்பவத்தன்று வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது மண்எண்ணைய் விளக்கின் தீ எதிர்பாராதவிதமாக இவர் மீது பட்டது.

    இதில் உடலில் தீ பிடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×