search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப்பள்ளியில்  பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீட் தேர்விற்கான  பயிற்சி
    X

    பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் மோகன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    அரசுப்பள்ளியில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி

    • அரசுப்பள்ளியில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அந்த குழந்தை என்னிடம் படித்த குழந்தை என்று சொல்லும்பொழுது தனக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்.

    விழுப்புரம்:

    அரசுப்பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வருக்கும் தன்னம்பிக்கை ஒன்றே, வெற்றிக்கு அடையாளமாக திகழும் என மாவட்ட கலெக்டர் மோகன் தகவல்.விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்–கல்வித்துறை மூலம், 12-ம் வகுப்பு மாண–வர்களுக்கான நீட் தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவி களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மோகன், வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டியதுடன், மாணவ-மாணவிகளுக்கு 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டதுடன், அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் பேசியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை ஒன்றே, வெற்றிக்கு அடையாளமாக திகழும், தற்பொழுது அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் எல்லோரும் வியக்கும் வண்ணம் அதிகளவு மதிப்பெண் பெற்று பாராட்டுக்களை பெற்று வருகிறீர்கள். இங்கு படிக்கும் அனைவரும் நடுத்தர குடும்பம் மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பீர்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாணவ, மாணவியும் தங்கள் மனதிற்குள் ஒரு சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். என்ன–வென்றால் என்னாலும் முடியும் என்று நினைத்து படிக்கும்பொழுது எளிதாக இலக்கை அடைவீர்கள். அதற்கு ஆசிரியர்களும் அவர்களுக்கு உறுதுணை–யாக இருந்திட வேண்டும். எந்தவொரு மாணவரும் பெற்றோர், கடவுள், ஆசிரியர் ஆகியோரின் நன் மதிப்போடு செல்லும் பொழுது அவர்களுக்கு வெற்றி முன் செல்லும். அதேபோல், ஆசிரியர் களுக்கு மட்டும்தான் இப்பெருமை உண்டு. அது என்ன வென்றால், தன்னிடம் படித்த மாணவனோ, மாணவியோ மிகப்பெரிய வெற்றி பெற்று பெரிய அளவில் பொறுப்பில் இருக்கும்பொழுது பேசப்படும் சொல், அந்த குழந்தை என்னிடம் படித்த குழந்தை என்று சொல்லும்பொழுது தனக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைக்கும்.

    அதேபோல், வெற்றி பெற்ற மாணவனோ, மாணவியோ அந்த ஆசிரி யரிடம் நான் படித்ததால் எனக்கு வெற்றி கிடைத்தது என்ற சொல்லும், அதிர்ஷடம் இந்த பணியில் மட்டும்தான் உள்ளது. ஆகவே, கல்வியால் மாண வருக்கும் பெருமை, அந்த ஆசிரியருக்கும் பெருமை அதை விட மற்றொரு பெருமை ஒன்று உண்டு என்றால், பிள்ளை களால் சாதனை கிடைத்தால் அவர்களின் பெற்றோர் களுக்கு பெருமை தானாக தேடி வந்துவிடும். ஆக நாம் கற்கும் கல்வி, நம்மை மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ள அத்தனைபேருக்கும் பெருமை தேடித்தரக்கூடிய மாபெரும் சக்தியாக திகழ்கின்றன. எனவே, நாம் நன்றாக படித்து நம் லட்சியத்தை நிறை வேற்றிடவும், நம்மால் மற்றவர்களுக்கு பெருமைத் தேடித்தரவும் சிறந்து கல்வி பயின்று சாதனை யாளர்களாக வேண்டும் என கலெக்டர் மோகன் வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×