என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
- 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சவரிமுத்து(வயது 78).
இவர் சம்பவத்தன்று 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து சிறுமியை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சவரி முத்துவை கைது செய்தார்.
Next Story






