search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அஞ்சலக கண்காணிப்பாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
    X

    அஞ்சலக கண்காணிப்பாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

    • அஞ்சலக கண்காணிப்பாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • அடையாள அட்டை வழங்காத

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் முருகப்பாண்டியன். இவர் கடந்த 1.06.2017ம் ஆண்டு பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக அடையாள அட்டை வேண்டி அதற்கான தொகை ரூ. 250ம் அளித்து விண்ணப்பித்திருந்தார். இவரது அடையாள அட்டை தராததால் மாவட்ட தலைமை தபால்நிலைய அலுவலரிடம் பலமுறை தன் அடையாள அட்டையை தாருங்கள் என கேட்டுப் பார்த்தும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறி காலம்தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலான முருக ப்பாண்டியன் எதிர்மானு தாரர்களான ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்கா ணிப்பாளர், பெரம்பலூர் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலர் ராஜி, பாடாலூர் அஞ்சல் அலுவலக தபால்காரர் கலியமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து சேவை குறைபாடு காரணமாக ரூ,9 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ. 10 ஆயிரம் பெற்றுத்தரவேண்டும் என பெரம்பலூர் வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மூலம் வழக்கு தொடந்தார்.

    இந்த வழக்கு விசாரனையில் முறையான பதில் தாக்கல் செய்யபடாததாலும், இதுவரை அஞ்சல் அடையாள அட்டை வழங்காததாலும் இரு தரப்பையும் விசாரித்த நுகர்வோர் கோர்ட் தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர். அஞ்சலக சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மனுதாரர்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியதாற்காக நஷ்ட ஈடாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரமும் மனுதாரருக்கு கொடுத்திட வேண்டும் என உத்தரவிட்டனர்.

    Next Story
    ×