search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எறையூரில் சிப்காட் தொழில் பூங்கா
    X

    எறையூரில் சிப்காட் தொழில் பூங்கா

    • எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியினை பார்வையிட்டார்

    பெரம்பலூர்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் 12.30 மணியளவில் சிப்காட் தொழில் பூங்காவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அதில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்தார்.

    அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.15 மணிக்கு அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகைமேட்டுக்கு சென்று, அங்கு அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியினை நேரில் பார்வையிடுகிறார்.

    நலத்திட்ட உதவிகள்

    இதில், மாளிகைமேடு அகழாய்வில் கண்டறியப்பட்ட பழமையான பொருட்கள் மற்றும் அகழாய்வு மேற்கொண்ட பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் இரவில் அரியலூர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

    அமைச்சர் வருகையையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    "

    Next Story
    ×