search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் காயம்
    X

    வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் காயம்

    • வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர்
    • டிரைவரை போலீசார் கைது செய்தனர்

    பெரம்பலூர்

    சென்னையை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது46). இவரும், இவரது மகள் யாமஸ்ரீ (9) ஆகியோரும் ஒரு காரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த காரை சென்னையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (50) ஓட்டி வந்தார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே டிப்பர் லாரி ஒன்று சமிக்ஞை செய்யாமல் திடீரென வலது புறத்திலிருந்து இடது புறத்துக்கு திரும்பிய போது அதை பின் தொடர்ந்து வந்த கார், லாரி மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் சுந்தர்ராஜ், காரில் பயணம் செய்த பாக்கியராஜ், யாமஸ்ரீ ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த அருண் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×