search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இலவச பொது மருத்துவ முகாம்
    X

    இலவச பொது மருத்துவ முகாம்

    • இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது
    • பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள அயன் பேரையூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலபணித்திட்ட அமைப்பு மற்றும் வி.களத்தூர் அரசு கால்நடை மருந்தகமும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது .

    வாலிகண்டபுரம் வட்டார மருத்துவ அலுவலரும் முதன்மை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் பிரேம் குமார், மற்றும் வாலிகண்டபுரம் நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் பிரகாஷ் , டாக்டர் பிரதீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்புண், இரத்த சோகை , இரத்த அழுத்தம் , கண் பார்வை பரிசோதனை போன்ற அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் அயன் பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250 -க்கும் மேற்பட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இம்முகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்தும் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், முதுகலை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×