என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் நர்சிங் மாணவி பலி
    X

    விபத்தில் நர்சிங் மாணவி பலி

    • விபத்தில் நர்சிங் மாணவி பரிதாபமாக இறந்தார்.
    • 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    பெரம்பலூர்

    திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற பிரியங்கா தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் மாலையில் நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது திடீரென்று பிரேக் போட்டதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பிரியங்கா தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து பிரியங்காவை மீட்டு பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×