search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமணம் செய்த வாலிபருக்கு ஓராண்டு சிறை
    X

    குழந்தை திருமணம் செய்த வாலிபருக்கு ஓராண்டு சிறை

    • குழந்தை திருமணம் செய்த வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கபட்டுள்ளது
    • பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வர் தனது மகளை காணவில்லை எனவும், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் என்பவர் மீது சந்தேகமாகவுள்ளதாகவும் , தனது மகளை கண்டுபிடித்து தருமாறு பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இதில் அரணாரை வடக்குகாலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் லட்சுமணன் (வயது31) என்பவர் சிறு வயது பெண் குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்து. அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். நேற்று விசாரணை செய்த நீதிபதி முத்துகுமரவேல் குற்றவாளி லட்சுமணனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×