search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரம்பலூர் சில்மிஷ ஆசிரியர் சஸ்பெண்ட்
    X

    பெரம்பலூர் சில்மிஷ ஆசிரியர் சஸ்பெண்ட்

    • பெரம்பலூர் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யபட்டார்
    • ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த பட்டதாரி ஆங்கில ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கோபிநாத் கொடுத்த புகார் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர் செல்வக்குமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.


    Next Story
    ×