search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்
    X

    கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்

    • கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றபட்டது
    • திருக்கோயிலுக்கு சொந்தமான 1.60 செண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை மேற்கு புதுக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 1.60 செண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் உத்திரவின்பேரில் தாசில்தார் பிரகாசம் தலைமையில் கோவில் ஆய்வாளர் தமிழரசி, வக்கீல் ஆனந்தராஜூ மற்றும் வி.ஏ.ஓ., கோவில் பணியாளர்கள் முன்னிலையில் சர்வேயர் கொண்டு கோயில் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதினம் செய்யப்பட்டது. அப்போது புதுக்குறிச்சி கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×