என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
குடியரசு தின விழா கொடியேற்றம்
- கலெக்டர் கொடியேற்றினார்
- 10லட்சம் மதிப்பில் 94 பேருக்கு நலத்திட்ட உதவி
பெரம்பலூர்:
இந்தியத்திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா முன்னிட்டு பெரம் பலுார் மாவட்ட கலெக் டர் அலுவல க பெருந் திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் காவல்துறையில் சிறப் பாக பணிபுரிந்த 18 காவ–லர்களுக்கு முதல–மைச்சர் பதக்கங்களையும், 47 காவலர்களுக்கு நற்சான்றி–தழ்களையும் வழங்கினார்.
விழாவில் குடியரசு தின போலீசார் அணிவகுப்பிற்கு ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், முதலாம் படைப்பிரிவிற்கு ஆயுதப் படை போலீஸ் சப்-–இன்ஸ்பெக்டர் பத்பநா–பனும், இரண்டாம் படைப் பரிவிற்கு ஆயுதப்ப–டை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சீ மானும், மூன்றாம் படைப்பிரிவிற்கு ஆயு–தப் படை போலீஸ் சப்-–இன்ஸ்பெக்டர் சந்திர–போசும் தலைமை–யேற்று வழி நடத்தி சென்ற–னர்.
மேலும் ஊர்க்காவல் படை அணிவகுப்பை ஆல்பர்ட் தலைமையேற்று வழி நடத்தி சென்றார். முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த படைவீரரின் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பராமரிப்பு மானியத்தையும், மாவட்ட மாற்றுத்திறனாளி கள்நலத்துறையின் மூலம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.13 ஆயிரத்து 549 மதிப்பிலான திறன் பேசியினையும்,
தோட்டக்கலைத்துறை–யின் மூலம் தேசிய தோட் டக்கலை இயக்கத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மினி டிராக்டர் எந்திரத்தையும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஒருவ–ருக்கு ரூ.1.லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பவர் வீடர் கருவியினையும், ஆதிதிராவிடர் நலத்துறை–யின் மூலம் ஒருவ–ருக்கு ரூ.5,ஆயிரத்து 580 மதிப்பி–லான மின்மோட்டா–ருடன் கூடிய தையல் எந்தி–ரத்தை–யும் மேலும் பல்வேறு துறை–களின் மூலம் மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட–பிரியா வழங்கினார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு ஷியாமளா, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டார். குடியரசு தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் வெங்கடா பிரியா பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் நொச்சியம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அதனைத் தொடரந்து மதனகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்வில் மாவட்ட கலெக்டர் வெங்கடா பிரியா மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்