search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷச்சாராய சாவு 63 ஆக உயர்ந்தது: 77 பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ப்பு
    X

    விஷச்சாராய சாவு 63 ஆக உயர்ந்தது: 77 பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ப்பு

    • 79 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர், கடந்த 18, 19-ந் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவம னையில், 229 பேர் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால், நேற்று இரவு வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி மருத்துவமணையில் 40 பேர், சேலம் 11 பேர், விழுப்புரத்தில் 2 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தற்போது கள்ளக்குறிச்சியில் 48 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 9 போர், விழுப்புரத்தில் 2 பேர், சேலத்தில் 19 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 79 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் இருந்த, 77 பேரை அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    Next Story
    ×