search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பவர்வடகரை அரசு  பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு
    X

    சாம்பவர்வடகரை அரசு பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு

    • 2-ம் பரிசு மாணவி பிருந்தாவுக்கு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் ரூ.1000 வழங்கினார்.
    • 10-ம் வகுப்பு மாணவி துர்காதேவிக்கு ரூ.1000- பரிசுதொகை வழங்கப்பட்டது.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சாம்பவர்வடகரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மற்றும் தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் இணைந்து ரொக்க பரிசுகள் வழங்கினர். 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அப்துல் வாகித்திற்கு ரூ.1,500 -ஐ பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி வழங்கினார். 2-ம் பரிசு மாணவி பிருந்தாவுக்கு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் ரூ.1000 வழங்கினார். 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பத்மாவுக்கு ரூ.1,500-ஐ சங்கத் தலைவர் சண்முகவேல் வழங்கினார். 2-ம் பரிசு ரூ.1000-ஐ மாணவி துர்காதேவிக்கு ஏ.ஈ.ஓ. சிவணைந்த பெருமாள் வழங்கினார். விழாவில் இளஞ்செழியன், சிவணைந்த பெருமாள், சண்முகவேல் , பாலசுப்ரமணியன், செயலாளர் சின்ன இசக்கி, பொன் சொர்ணவேல், ஆறுமுகம், பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×