search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதியில் போலி நகையை அடகு வைத்த 3 பெண்கள் கைது
    X

    பொன்னமராவதியில் போலி நகையை அடகு வைத்த 3 பெண்கள் கைது

    • அப்பெண்கள் சென்றபின்பு நகையை பரிசோதித்தபோது தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகை எனத்தெரியவந்துள்ளது.
    • மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் உள்ள மு.வடிவேல் என்பவருக்கு சொந்தமான தனியார் அடகுக்கடையில் கடந்த ஜூன் 27ம்தேதி மூன்று பெண்கள் தங்கநகையை அடகு வைக்கவேண்டும் என்று கூறி ரூ 2 லட்சத்து 65 ஆயிரம் அடகுக்கடன் பெற்று சென்றுள்ளனர். அப்பெண்கள் சென்றபின்பு நகையை பரிசோதித்தபோது தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகை எனத்தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து அதே மூன்று பெண்கள் நேற்று சனிக்கிழமை மீண்டும் அடகுவைக்க கடைக்கு வந்துள்ளனர். சுதாரித்து கொண்ட கடை உரிமையாளர் பொன்னமராவதி காவல்துறையினர்க்கு தகவல் அளித்துள்ளார். அங்கு சென்ற காவல்துறையினர் மூன்று பெண்களையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பொன்னமராவதி வலையபட்டி ரா.சங்கரி(வயது50), நத்தம் தனலெட்சுமி(40), ராமலெட்சுமி(42) என தெரியவந்து.

    மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர் திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×