என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பயனாளிகளுக்கு ரூ.4.40 கோடி மதிப்பில் கடனுதவி
- பயனாளிகளுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது
- மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின்படி வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில், அரசு திட்டங்களுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை, ஆட்சியரகத்தில் கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இம்முகாமில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் சிறு தொழில் மானிய கடன்கள், மகளிர் சுயஉதவி குழு கடன்கள், கல்விக்கடன்கள், வாகன கடன்கள், சாலையோர வியாபாரிகளுக்கான கடன்கள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குதல் திட்டத்திற்கான கடன்கள், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட கடன்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கான கடன்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை கடன்கள், ஊரக வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நபர்களுக்கான தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 47 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.93 கோடி மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் 40 நபர்களுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான காசோலைகளையும் என ஆகமொத்தம் ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இம்முகாம் மூலமாக வங்கி கடன் இணைப்புகளை பெற்ற அனைத்து நபர்களும் உரிய முறையில் முதலீடு செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்