என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபான கடை அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்
    X

    மதுபான கடை அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்

    • மதுபான கடை அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லுப்பட்டி செல்லும் சாலையில் அரசு புதிய மதுபானக் கடை அமைக்க இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில் இந்த சாலையை பயன்படுத்தும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி சாலையில் கல்லுப்பட்டி மடம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.க. ஒன்றிய தலைவர் சித்திரவேல் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    Next Story
    ×