என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து கட்சிகள்-அமைப்புகள் ஆலோசனை கூட்டம்
    X

    அனைத்து கட்சிகள்-அமைப்புகள் ஆலோசனை கூட்டம்

    • அனைத்து கட்சிகள்-அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
    • அம்பேத்கார் சிலை அமைப்பது குறித்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டாக்டர் அம்பேத்கார் சிலை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தகூட்டத்தில் விசிக , தி.மு.க., சிபிஐ, சிபிஎம், மஜக, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வணிகர் பேரவை,வழக்கறிஞர் சங்கம், அம்பேத்கார் மக்கள் இயக்கம் போன்ற 22 ற்கும் மேற்பட்ட அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.

    ஆலோசனையை தொடர்ந்து அறந்தாங்கியில் அம்பேத்கர் திருவுருவ சிலை வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, அரசு விதித்த நிபந்தனைகளை, சிலை அமைப்புக்குழுவினரால் ஏற்கப்பட்டு அனைத்து ஆவணங்கள் விதிமுறைகள் சரி செய்து கொடுக்கப்பட்டும் இதுவரை மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்யவில்லை,

    எனவே கலெக்டர் பரிந்துரை வழங்க வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் மாதம் 2-ம் தேதி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிப்பதெனவும், அதிலும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்யவில்லையெனில் 2023ம் ஆண்டில் அனைத்துக் கட்சி மாநில தலைவர்களை அழைத்து சுமார் 10 ஆயிரம் பொதுமக்களை திரட்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கட்சி மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×