search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
    X

    கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு

    • கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழந்தார்
    • புல் செடி கொடிககளை அகற்றும் போது சம்பவம்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டிவிடுதி எஸ்.மேலப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 52). லாரி டிரைவர். இவர் அப்பகுதியில் உள்ள ஸ்ரீ பொந்து மாரியம்மன் கோயில் கோபுரத்தில் உள்ள ஆல மரக்கன்று மற்றும் புல் செடி கொடிககளை அகற்றும் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் ரெங்கசாமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செம்பட்டி விடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×