என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்வி விழிப்புணர்வு பேரணி
- கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது
- மாற்றுத்திறனாளிகளுக்கான
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் அடைக்கப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மருத.பவுன்ராஜ் முன்னிலை வகித்தார்.பேரணியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, ஊக்குவித்தல், கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சீனி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ், சிறப்பாசிரியர்கள் லீலா ராணி, அறிவழகன், ராதா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மாரிமுத்து, நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story






