search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேற்பனைக்காடு அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம்
    X

    மேற்பனைக்காடு அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம்

    • மேற்பனைக்காடு அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது
    • 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணபுஷ்பகலா அய்யனார், ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் விழாதொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது

    கோயிலை வலம் வந்து பின்பு கோபுரக் கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பிரபாகர சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்காண திரண்டிருந்த அப்பகுதியைச்

    சுற்றியுள்ள கிராம பொதுமக்கள்,ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ பத்ரகாளியம்மனின் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×