search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடி பேரூராட்சியில் புதிய மின்மாற்றி
    X

    கறம்பக்குடி பேரூராட்சியில் புதிய மின்மாற்றி

    • கறம்பக்குடி பேரூராட்சியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது
    • அரசு அலுவலகங்கள் மற்றும் சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பத்தாவது வார்டு உள்ளடக்கிய பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்தப் பகுதியில் தான் அரசு மருத்துவமனை காவல் நிலையம், துவக்கப்பள்ளி, 300க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் மசூதி ஆகியவை உள்ளன. இங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் சுகாதார நிலையத்தில் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் போர்க்கால அடிப்படையில் புதிய மின்மாற்றியை அமைத்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான முருகேசன் தலைமை தாங்கினார். இதில் ஆத்மா கமிட்டி சேர்மன் முத்துகிருஷ்ணன், பத்தாவது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி, உதவி மின் பொறியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×