search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
    X

    நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

    • எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்
    • நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் மெய்குடி பட்டி கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, மாவட்ட தி.மு.க. செயலாளர் கே. கே. செல்ல பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்து, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையத்தில் கொடுத்து உரிய தொகை வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன், திமுக மாவட்ட பிரதிநிதி முருகேசன், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சக்தி.விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×