search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா ?
    X

    தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா ?

    • மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்காததால் குழப்பம்
    • ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள்,மாடுபிடி வீரர்கள் அனுமதிச்சீட்டு பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்.கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு ஜனவரி 2ம் தேதி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா ஆறாம் தேதி நடைபெறும் என்று விழா குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இன்று வரை அதற்கான எந்த அனுமதி உத்தரவும் அதிகாரிகளிடம் இருந்து வரவில்லை. 6ம்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனுமதிச்சீட்டு பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக தச்சங்குறிச்சி கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவுற்ற நிலையில் உரிய அனுமதி வராததால் விழா குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு விழா தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டால், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள்,விழா குழுவினர் ,கிராம பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதனால் தேவையற்ற குழப்பம் தீரும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    Next Story
    ×