search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நாய்கள் கடித்ததில் புள்ளிமான் சாவு
    X

    நாய்கள் கடித்ததில் புள்ளிமான் சாவு

    • நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது
    • வழிமாறி வந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி அருகே வீரமங்களம் ஊராட்சிக்குட்பட்ட சின்னசெங்கீரை கிராம பகுதிக்குள் ஆண் புள்ளிமான் ஒன்று வழிமாறி வந்துள்ளது. இதனை அப்பகுதியிலிருந்த நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த புள்ளிமான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே இறந்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், சம்பவம் குறித்து வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனச்சரக அலுவலர் மேகளா உள்ளிட்ட அதிகாரிகள் இறந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மானின் உடலை அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து வனச்சரக அதிகாரிகள் முன்னிலையில் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் வனவர்கள் அன்புமணி, அந்தோணிசாமி, வேட்டைத் தடுப்பு காவலர் மரியசைமன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர். வழிமாறி ஊருக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×