search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மோதி மாற்றுத்திறனாளி சாவு
    X

    ரெயில் மோதி மாற்றுத்திறனாளி சாவு

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    பாணாவரம் அடுத்த நிரஞ்சன் தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 54 ). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி கண்ணகி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் குப்பன் பெங்களூரு செல்வதற்காக சோளிங்கர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். குப்பனால் ரெயில் நிலைய படி ஏறி நடைமேடைக்கு செல்ல முடியாத காரணத்தினால் முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமுறைக்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் குப்பன் மீது மோதியது. இதில் அடிபட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து ரெயில்வே போலீசார் குப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×