search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்
    X

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஒலிம்பியாட்டு ஜோதி ஓட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கிவைத்து பங்கேற்ற போது எடுத்த படம்.

    ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள ஒலிம்பியாட் ஜோதியினை ராணிப்பேட்டை முத்து கடை பஸ்நிலையத்திலிருந்து செஸ் ஜோதி ஓட்டத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து ஓட்டத்தில் கலந்துகொண்டார்.

    முத்துக்கடையில் இருந்து செஸ் ஜோதியினை கலெக்டர் ஏந்திகொண்டு விசி மோட்டூர் வழியாக வாலாஜா வந்தடைந்தனர். பின்னர் ஆற்காடு நகராட்சி சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், நகரமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×