என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி பெண் பலி
- மகன் சமாதியில் சடங்கு செய்ய சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். சலவைத் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா (வயது 58). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது உடலை அரக்கோணம் ரெயில்வே அருகே உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். வசந்தா தனது மகன் இறந்த துக்கம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்தார்.
மகன் இறந்த இடத்திற்கு சடங்கு செய்வதற்காக வசந்தா சுடுகாட்டிற்கு சென்றார். அப்போது ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அந்த வழியாக வந்த அரக்கோணத்தில்இருந்து திருத்தணி சென்ற புறநகர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர் வசந்தாவின் உடலை அரக்கோணம் ரெயில்வே போலீசார் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






