search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் திருடிய வாலிபர்கள் கைது
    X

    பைக் திருடிய வாலிபர்கள் கைது

    • ரோந்து பணியின் ேபாது சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் தடுத்த ரங்காபுரம் ஜங்ஷன் அருகே போலீசார் ரோந்து பணியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

    பின்னர் வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    பின்னர் தீவிர விசாரணையில் அவர்கள் மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (35 ) மற்றும் பாராஞ்சி கிராமத்தை சேர்ந்த விஜய் (22) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் பைக் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×