என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
- மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தும் 1476 கனஅடியாக சரிந்துள்ளது.
- பெரியாறு 21.2, தேக்கடி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
கூடலூர்:
பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணை நீர்மட்டம் 70.01 அடியை எட்டியது. இதனைதொடர்ந்து அணையை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் வைகையாற்றில் திறக்கப்பட்டு வருகிறது. மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தும் 1476 கனஅடியாக சரிந்துள்ளது. இருந்தபோதும் நீர்மட்டம் 70.01 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1269 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 137.95 அடியாக உள்ளது. 1543 கனஅடிநீர் வருகிறது. நேற்று 511 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 667 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு 179 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 139 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.48 அடியாக உள்ளது. 110 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், 80 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
பெரியாறு 21.2, தேக்கடி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்