search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறையிலும் இருக்கிறது-சீமான்
    X

    பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறையிலும் இருக்கிறது-சீமான்

    • குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    • புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை.

    சிவகிரி:

    மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி அருகே நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெள்ளையர்களை எதிர்த்து வீரவாள் சுழற்றி போரிட்ட மாமன்னர் பூலித்தேவரின் வீரமும், திமிரும் தமிழர்களாக எங்களுக்கும் உண்டு. பீரங்கியும், துப்பாக்கியையும் எதிர்த்து வெறும் வாளையும், வேலையும் கொண்டு யுத்தம் செய்த பெரும் பாட்டனார் பூலித்தேவர்.

    திரை உலகத்தில் மட்டுமல்லாது, பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறையை பொறுத்தவரையில் குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த துறையிலும் இதுபோன்று நிலை ஏற்படக்கூடாது.

    தற்போது கேரவன் போன்ற வாகனங்களில் கூட காமிராக்கள் அமைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடிப்பது அநாகரிகமான செயல். இது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காது என்பதற்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    உலகிற்கே அறிவை கடன் கொடுத்த மக்கள் நாங்கள். புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை. குல கல்வி முறையை மறுபடியும் ஊக்குவித்து வருகின்றனர். புதிய கல்வி கொள்கை ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×