search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அதிர வைக்கும் ஆன்லைன் மோசடி....புதிய எண்களில் இருந்து போன் வந்தால் உஷாராக பேசுங்கள்
    X

    அதிர வைக்கும் ஆன்லைன் மோசடி....புதிய எண்களில் இருந்து போன் வந்தால் உஷாராக பேசுங்கள்

    • யார் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டாம்.
    • 1930 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

    சென்னை:

    ஆன்லைன் மூலமாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணத்தை பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகமாகவே தங்களது கைவரிசையை காட்டு கொண்டிருக்கிறது.

    மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஏமாற்றி உங்களது பெயரில் போதைப் பொருள் பார்சல் வந்துள்ளது, உங்கள் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பறிப்பது தொடர்கிறது.


    நாங்கள் சொல்கிறபடி ஆர்.பி ஐ. வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை அனுப்புங்கள். நாங்கள் உங்களைப் பற்றி விசாரணை நடத்தி விட்டு அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம் என்று கூறி ஏமாற்றுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இது ஒரு புறம் இருக்க வங்கி அதிகாரி போல பேசியும் மோசடி கும்பல் ஆன்லைன் மூலமாக பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஒரு சிலர் இது போன்ற மோசடி கும்பல்களை அடையாளம் கண்டு சிலர் உடனடியாக போனை துண்டித்து விடுகிறார்கள்.

    இன்னும் சிலரோ மோசடி கும்பலை சேர்ந்தவர்களிடம் போனில் வாக்குவாதம் செய்து யாரை ஏமாற்ற பார்க்கிறாய்? என்று திட்டிவிட்டும் போனை துண்டிக்கிறார்கள்.

    இப்படி தமிழகம் உள்பட நாடு முழுவதுமே மோசடி கும்பல் தொடர்ச்சியாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருப்பவர்களிடமும் இது போன்று பணம் பறிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் நாடு முழுவதும் ரூ. 1750 கோடிபணத்தை மோசடி பேர்வழிகள் சுருட்டி இருக்கிறார்கள்.

    இந்த மோசடியை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அதனை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே மாறிப் போயிருக்கிறது.

    வயதானவர்கள் மற்றும் ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோர்களை குறி வைத்தே மோசடி நபர்கள் பேசுகிறார்கள். அப்போது அவர்களை மூளைச் சலவை செய்து மிரட்டி தாங்கள் சொல்கிறபடி கேட்க வைத்து விடுகிறார்கள்.

    இதன் மூலமே லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.


    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மோசடி அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை தற்போது பறிகொடுத்துள்ளார்.

    இது தொடர்பாகவங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, `வங்கியில் இருந்து போன் செய்து யாரும் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை கேட்பதில்லை. அதே நேரத்தில் வங்கி தொடர்பான தொலைபேசி அழைப்புகள் வந்தால் 1860 என்று தொடங்கும்.

    அதேபோன்று அப்படியே யாரும் பேசினாலும் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

    எனவே யார் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை கேட்டாலும் அவர்களிடம் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

    அதேநேரத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 1930 என்ற கட்டுப்பாட்டு அறைஎண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த போதிலும் ஒரு புறம் மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மோசடி பேர்வழிகள் அந்த அளவுக்கு அதிகாரிகள் போல ஆங்கிலத்தில் பேசி துணிகர மோசடியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×