என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி கூடுதல் கட்டிடம் திறப்பு
- பள்ளி கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டது.
- தலைமை ஆசிரியை ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ரூ.29 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கட்டிடத்தை திறந்து வைத்தனர். தலைமை ஆசிரியை ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






