என் மலர்
உள்ளூர் செய்திகள்

முளைப்பாரி ஊர்வலம்
- மானாமதுரை அருகே உள்ள முத்துமாரி அம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நோய் நொடியின்றி வாழவும் இந்த முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசளை கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல்திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நோய் நொடியின்றி வாழவும் முத்துமாரி அம்மனை வேண்டி இந்த முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர் வைகை ஆற்றில் முளைப்பாரி கரைத்தனர் . இதனைத் தொடர்ந்த கிராம இளைஞர்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட கிடா வெட்டி, சூப்பு தயாரித்து கிராம மக்களுக்கு வழங்கினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story






