search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பள்ளி கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    புதிய பள்ளி கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • மானாமதுரை அருகே புதிய பள்ளி கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ்.காரைக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடத்தை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி திறந்து வைத்து பேசினார். விழாவில் இளையான்குடி வடக்கு ஒன்றியம் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன், எஸ்.காரைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டியன், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு ராஜா மற்றும் அரசு துறை அதிகாரி கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவி கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×