என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெற்குப்பை நூலகத்தில் முப்பெரும் விழா
    X

    நெற்குப்பை நூலகத்தில் முப்பெரும் விழா

    • நெற்குப்பை நூலகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கல்வி மற்றும் கலை அரங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் சோ மேலெ நினைவு அரசு கிளை நூலகத்தில் குழந்தை கவிஞர் வள்ளியப்பா நூற்றாண்டு விழா, உங்கள் மாவட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான போட்டி மற்றும் பரிசளிப்பு விழா, கலை மற்றும் கல்வி அரங்கம் அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.

    நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் புசலான் வரவேற்றார். சோமசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆத்திசூடி ஜெயராமன், மகிபாலன்பட்டி சாத்தப்பசெட்டியார், வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கல்வி மற்றும் கலை அரங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் செயல் அலுவலர் கணேசன், மண்டலதுணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், இளநிலை உதவியாளர் சேரலாதன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், அலமேலு அழகப்பன், அருணாச்சலம், உமா வள்ளியப்பன், தேவி மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளை நூலக நல்நூலகர் விஜயா நன்றி கூறினார்.

    Next Story
    ×