search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஏழை பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம்- எடப்பாடி பழனிசாமி தகவல்
    X

    ஏழை பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம்- எடப்பாடி பழனிசாமி தகவல்

    • அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இனிப்பு வழங்கி சான்றிதழ் வழங்கினார்.
    • ஏழை-எளிய பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மெய்யனூர் மாரியம்மன் கோவில் அருகில் அம்மா இலவச பெண்கள் தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இதை கடந்த மே மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    தற்போது இந்த மையத்தில் 4 மாதம் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இனிப்பு வழங்கி சான்றிதழ் வழங்கினார்.

    அப்போது ஏழை-எளிய பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×