என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை ஜவுளி வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சென்னை அட்சினாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஜவுளி வாங்குவதற்காக ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை காரில் கொண்டு வந்தார். அத்தொகைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும் படை, 4 நிலை கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கப்பணமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேலும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பரிசு பொருட்களை கொண்டு சென்றாலும் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுவரை 9 பேரிடம் ரூ.9.43 லட்சம் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து உள்ளனர். இதில் உரிய ஆவணங்களை காண்பித்து மேல்முறையீட்டு குழுவில் முறையிட்டு சிலர் உரிய ஆவணங்களை வழங்கி வருகின்றனர்.
இதன்படி மேல்முறையீட்டு குழு பரிந்துரைப்படி சில நாட்களுக்கு முன் கரூரை சேர்ந்த பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கவீன் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.34 லட்சம் உரிய ஆவணங்கள் சமர்பித்ததால் அத்தொகையை அவரிடம் திரும்ப வழங்கினர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை அட்சினாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஜவுளி வாங்குவதற்காக ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை காரில் கொண்டு வந்தார். அத்தொகைக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதனால் அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார். அவரது உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட கருவூலத்தில் அத்தொகை ஒப்படைக்கப்பட்டது.






