search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறைகேட்டில் ஈடுபட்டதாக மருதூர் ஊராட்சி செயலாளர், பொறியாளர் சஸ்பெண்டு
    X

    முறைகேட்டில் ஈடுபட்டதாக மருதூர் ஊராட்சி செயலாளர், பொறியாளர் சஸ்பெண்டு

    • மருதூர் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • கலெக்டர் சமீரன் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், மருதூர் ஊராட்சியில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மருதூர் கிராமம். இந்த ஊராட்சியில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த கிராம மக்களின் பயன்பாட்டிற்காகவும், அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக மருதூரில் ஊராட்சி அலுவலகம் உள்ளது.

    இந்த ஊராட்சி அலுவலகத்தின் செயலாளராக சதீஷ்குமார் என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் மருதூர் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து கலெக்டர் சமீரன் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், மருதூர் ஊராட்சியில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மருதூர் ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சந்திரசேகர் ஆகியோரை மாவட்ட கலெக்டர் சமீரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மற்ற ஊராட்சியில் உள்ள செயலாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×