search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமரின் பாதுகாப்பு பற்றி விமர்சனம்: பா.ஜனதா நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை
    X

    பிரதமரின் பாதுகாப்பு பற்றி விமர்சனம்: பா.ஜனதா நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை

    • தமிழக அரசு பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவில்லை என்பது போன்று நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.
    • புகாரின் பேரில் நிர்மல்குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருப்பவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். இவர் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவில்லை என்பது போன்று தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிர்மல்குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று நிர்மல்குமார் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×