என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு, 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்காமல் சாதகமான நீதிமன்ற தீர்ப்பை மட்டும் சிலர் கொண்டாடுகிறார்கள்- தமிழிசை
- இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
- மாணவர்கள் திறமையுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இதனை மாணவர்கள் திறமையுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது மகிழ்ச்சிக்கும், பணிக்கும் எல்லை இல்லை. திமிங்கலங்கள் இடையூறு செய்தாலும் எனக்கு கவலை இல்லை. நான் தமிழச்சி, தமிழ் குடிமகள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். அதனால்தான் தமிழகத்தில் கருத்து சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது. கருத்து சுதந்திரம் எனக்கும் இருக்கிறது என்பதை அனைத்து கட்சி சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏழு பேர் விடுதலை என்பது நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பு. இது குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
நீட் தேர்வு, 10 சதவீத இட ஒதுக்கீடு போன்ற நீதிமன்ற தீர்ப்புகளை தமிழகத்தில் சிலர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தங்களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகளை மட்டும் கொண்டாடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






