என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கதைசொல்லல் மற்றும் சமூக மாற்றத்தில் சினிமாவின் சக்தியை வலியுறுத்திய ஆர். டி. பாலாஜி உரையாற்றினார்.
    • மாணவர்கள், படங்களின் வரலாற்று மற்றும் சினிமா அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை சார்பில் கடந்த 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களில் சர்வதேசத் திரைப்பட விழா சிறப்பாக நடைபெற்றது.

    சமூக- அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிந்தனையைத் தூண்டும் படங்களுக்குப் பெயர் பெற்ற பிரபல இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரசன்னா விதானகேயின் படைப்புகளைச் சிறப்பிக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

    பாரம்பரிய விளக்கு ஏற்றும் நிகழ்வுடன் இவ்விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து கதைசொல்லல் மற்றும் சமூக மாற்றத்தில் சினிமாவின் சக்தியை வலியுறுத்திய ஆர். டி. பாலாஜி உரையாற்றினார்.

    இதில், முதல் நாள் விழாவில், போருக்குப் பிந்தைய இலங்கையில் அமைக்கப்பட்ட ஒரு துடிப்பான காதல் கதையான "உங்களுடன், நீங்கள் இல்லாமல்" (2012) மற்றும் காலனித்துவக் கால இலங்கையில் அடையாளம் மற்றும் ஒடுக்குமுறையை ஆராயும் "காடி" (2019) ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 

    ஒவ்வொரு திரையிடலுக்குப் பிறகும் ஒரு கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. மாணவர்கள், படங்களின் வரலாற்று மற்றும் சினிமா அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.

    இரண்டாம் நாள் விழாவில், "பாரடைஸ்" (2023) திரையிடப்பட்டது. இது இடம்பெயர்வு மற்றும் சலுகை பற்றிய சமகால நாடகமாகும்.

    பிரசன்னா விதானகேவுடன் பாட்காஸ்ட் பாணி ஊடாடும் அமர்வு ஒரு சிறப்பம்சமாகும் அங்கு அவர் தனது திரைப்படத் தயாரிப்புப் பயணம் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு ஒரு தனித்துவமான கற்றல் அனுபவத்தை வழங்கியது.

    முன்னோக்குகளை வடிவமைப்பதில் சினிமாவின் பங்கை வலுப்படுத்தியதோடு, அர்த்தமுள்ள விவாதங்களைத் தூண்டியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம்.
    • இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.

    மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    கல்வியில் இருந்து மக்களை நீக்கும் இனைத்து வேலைகளையும் தேசிய கல்விக் கொள்கை செய்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை.

    இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர தேசிய கல்விக் கொள்கை மூலம் முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம்.

    ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.

    ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ?

    இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ?

    திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பட்டமளிப்பு விழாவில் இறையன்பு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
    • சமூக அறிவுடன் கூடிய தலைமைப் பண்பைப் பெற முயல வேண்டும் என்று இறையன்பு தெரிவித்தார்.

    பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை இணைச் செயலாளர் திரு. சு. கோபிநாத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா வாழ்த்துரை வழங்கினார்.

    தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் இறையன்பு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 350 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

    விழாவில் பேசிய இறையன்பு அவர்கள், "பட்டங்கள் பல பெறினும் முதல் பட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்வில் மேன்மையுற அனைவரும் தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். சமூக அறிவுடன் கூடிய தலைமைப் பண்பைப் பெற முயல வேண்டும். நுண்ணறிவைப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும். அறிவைப் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் அது மேன்மையுறும். மேலும் இளைஞர்கள் உணர்ச்சி மேலாண்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

    பட்டமளிப்பு விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் வி. சாய் சத்யவதி, கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா, எஸ். ஏ. பொறியியல் கல்லூரி இயக்குநர் திரு. டி. சபரிநாத், எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி ஆலோசகர் திரு. சாலிவாகனன், எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் துறைத் தலைவர்கள் பங்கேற்றனர் 

    • படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை பகுதியில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.

    படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் விபத்தில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் பாஸ்கரை திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    • பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் வருகிறது.
    • பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

    திருவள்ளூர் :

    திருவள்ளூரில் புத்தக கண்காட்சி திருவிழா தொடங்கியது. புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் வருகிறது. பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாகன தணிக்கை, போக்குவரத்தை சீர் செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி. ஹெல்மெட் வழங்கப்பட்டது.
    • காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.

    சென்னையில் அதிகாலையில் காணப்பட்ட பனிமூட்டம் குறைந்து தற்போது வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினார்.

    வாகன தணிக்கை மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர், கூடுதல் காவல் ஆணையர் பவானீஸ்வரி ஆகியோர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினர். இதேபோல் காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.

    • தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது.
    • பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது.

    திருத்தணி:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆர்.கே.பேட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருத்தணிக்கு வந்தார். திருத்தணி ரெயில் நிலையம் அருகே கட்சிக்கொடி ஏற்றி வைத்து அவர் பேசும்போது,

    'தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் தற்போது சட்டமும் கிடையாது, ஒழுங்கும் கிடையாது. பெண்கள் வெளியில் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் உள்ளது. 5 வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை, 8 பேர் சேர்ந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களால் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    தான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபவடுபவர்களை வேறு மாதிரி செய்திருப்பேன். இந்த மிருகங்களை வெட்டிடுவோம். அப்போதுதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பயம் இருக்கும் என தெரிவித்தார்.

    • சாலைப்பணிக்காக இந்த நிறுவனத்தின் ரோடு ரோலர் கொண்டுவரப்பட்டு இருந்தது.
    • கேமராவில் ஆய்வு செய்தபோது ரோடு ரோலரை மர்ம நபர்கள் நூதன முறையில் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.

    பொன்னேரி:

    சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் தினகரன். சாலை ஒப்பந்த பணிகளை செய்யும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மீஞ்சூர் பகுதியில் நடைபெற்ற சாலைப்பணிக்காக இந்த நிறுவனத்தின் ரோடு ரோலர் கொண்டுவரப்பட்டு இருந்தது.

    கடந்த செப்டம்பர் மாதம் பணிகள் முடிந்த நிலையில் அந்த ரோடு ரோலரை சென்னைக்கு கொண்டு வருவதற்காக ஓட்டிவந்தனர். சோழவரம் சுங்கச்சாவடி அருகே செல்லும், ரோடு ரோலர் பழுதானது. தொடர்ந்து இயக்க முடியாததால் அந்த ரோடு ரோலரை டிரைவர் அங்கேயே விட்டுவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த, 24-ந்தேதி ரோடுரோலரை சரிசெய்து எடுத்து செல்வதற்காக என்ஜினீயர் தினகரன் ஊழியர்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த ரோடு ரோலரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது லாரி ஒன்றில், ரோடு ரோலரை மர்ம நபர்கள் நூதன முறையில் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து லாரியின் பதிவு எண்ணை வைத்து ரோடு ரோலரையே திருடி சென்ற திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், கோபிநாத், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    சாலையோரம் நீண்ட நாட்களாக ரோடு ரோலர் கேட்பாரற்று நின்றதால் கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி திருடி சென்றதாக தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரோடு ரோலர், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன.
    • ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.600 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொடங்கப்பட்டது. இங்கிருந்து மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன. இதில் மொத்தம் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வந்தது. இதில் 3 அலகுகள் பழுதான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக 2 அலகுகள் மட்டுமே செயல்பட்டு குடிநீரை உற்பத்தி செய்து வந்தது. இதனால் வடசென்னை பகுதிக்கு ஆலையில் இருந்து குறைவான அளவே கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வந்த மற்ற 2 அலகுகளிலும் எந்திரம் பழுதால் தண்ணீர் சுத்திகரிப்பு முழுவதும் நின்று போனது. கடந்த 4 மாதங்களாக அங்கு எந்த பணியும் நடைபெற வில்லை என்று தெரிகிறது. மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

     

    பழுதான எந்திரத்தில் மின் மோட்டார் பழுது, கார்பன் பில்டர் மைக்ரோ பில்டர், குழாய் உடைப்பு உளிட்ட பழுதுகளை சரி செய்ய போதிய பொருட்கள் இல்லாமலும் அதனை மாற்ற உடியாக நடவடிக்கை எடுக்காததே தண்ணீர் உற்பத்தி முழுமையாக நின்றதற்கு காரணம் என்று அங்குள்ள ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    காட்டுப்பள்ளி கடல்நீராக்கும் ஆலை பழுதால் கடந்த 4 மாதங்களாக வடசென்னை பகுதிக்கு முற்றிலும் அங்கிருந்த குடிநீர் அனுப்பப்படாமல் உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தற்போது புழல் ஏரியிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது வடசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் உள்ள எந்திர பழுதுகளை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • தெப்ப உற்சவ திருவிழாவுக்கான ஏற்பாடு பணிகள் கோவிலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவவிழா வருகிற 27-ந்தேதி அமாவாசை அன்று தொடங்கி 29-ந் தேதி வரை 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

    தெப்ப திருவிழாவில் உற்சவர் வைத்திய வீரராகவர் சமேதராக ஸ்ரீதேவி, பூ தேவியுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தெப்ப உற்சவ திருவிழாவுக்கான ஏற்பாடு பணிகள் கோவிலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். மாசிதெப்ப திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவான 24 அடியை நெருங்கி உள்ளது.
    • 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23.25 அடியாக பதிவானது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் பூண்டி முழுவதுமாக நிரம்பியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 5-ம் தேதி முதல் இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    ஏற்கனவே பருவமழையினால் செம்பரம்பாக்கம் ஏரியிலும் நீர் இருப்பு முழு கொள்ளை எட்டும் நிலையில் இருந்தது. தற்போது பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவான 24 அடியை நெருங்கி உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.2 31 டி.எம்.சி.தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நீர்மட்டம் 34.12 அடியாகவும் தண்ணீர் இருப்பு 2.861 டி.எம்.சி.யாகவும உள்ளது.

    இதே போல் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23.25 அடியாக பதிவானது. மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 3.443 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணி ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.
    • திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.

    திருவள்ளூரில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞரணி கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.

    அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணி ஒரு வாரமாகவே நடந்து வருகிறது. இந்த நிலையில், த.வெ.க. அலுவலகத்தையும் நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி மூலம் இடித்தனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    ×