என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை- சிறப்பு முகாம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
    X

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை- சிறப்பு முகாம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    • தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கும் போது 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • 2 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் பணி வழங்கலாம்.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள், பயனாளிகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மாவட்டத்தோறும் மேற்கொள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார அளவுகோல் மற்றும் இதர விவரங்களை கொண்டு தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவம் 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வெளியிட்டுள்ளது.

    அதில், தன்னார்வலர்கள் இல்லாத ரேசன் கடை பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், ரேசன் கடைகளில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை பெற முகாம்களில் பணியமர்த்தப்படுவார்கள்

    தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கும் போது 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் பணி வழங்கலாம். விருப்பமில்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×