என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விருகம்பாக்கத்தில் ஆட்டோ டிரைவர் மர்ம மரணம்
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
- சி.ஆர்.ஆர்.புரம் பகுதியில் இன்று காலையில் பாபு பிணமாக கிடந்தார்.
போரூர்:
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு (65). மது பழக்கம் உடையவர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தார். ஆட்டோவிலேயே படுத்து தூங்கி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சி.ஆர்.ஆர்.புரம் பகுதியில் இன்று காலையில் பாபு பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் ரத்த காயங்கள் இருந்தன. மர்மமான முறையில் பாபு இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உதவி கமிஷனர் சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் தாம்சன் ஜார்ஜ் சேவியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபு மது போதையில் தவறி விழுந்து அடிபட்டு இறந்தாரா? தகராறு காரணமாக அவரை யாரும் அடித்ததில் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.
அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்