என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
    X

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

    • வீட்டில் தனியாக இருந்த 9 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.
    • சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,

    எனக்கு திருமணமாகி கணவரும் 9 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று நானும் எனது கணவரும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றோம். வீட்டில் குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர்.

    மதியம் 12.30 மணியளவில் எங்கள் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சந்தோஷ் (வயது 23) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அவள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வருவதற்கு வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    நான் வந்ததும் எனது மகள் நடந்த சம்பவத்தை என்னிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என் 9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வீட்டில் தனியாக இருந்த 9 சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கூலித் தொழிலாளி சந்தோஷை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×