search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு-புஸ்ஸி ஆனந்த்
    X

    சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே இலக்கு-புஸ்ஸி ஆனந்த்

    • கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர்.
    • விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா?

    தஞ்சை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்று விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி ஏற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு நல உதவியாக புடவைகள் வழங்கினார்.

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மேல வீதியில் 50 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார். கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர். மேலும், கட்சி நிர்வாகி ஒருவரின் புதிய காரில் கட்சிக் கொடியை பொருத்தினார்.

    இந்த நிகழ்வுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவியும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்தும் வரவேற்பளித்தனர்.

    மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடியில் கொடி ஏற்றிய பின்னர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கமாகவும், இலக்காக உள்ளது. முதல்-அமைச்சர் நாற்காலியில் நிச்சயம் விஜய் அமருவார். இதற்காக தொண்டர்கள் அனைவரும் கட்சி பணி ஆற்றிட வேண்டும்.

    தொண்டர்கள் அனைவரும் ஜாதி, மதத்தை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும். விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா? அல்லது பொழுதுபோக்கு படமா? என்று இப்போது கூறமுடியாது. தற்போது கட்சி கொடியேற்று விழாவிற்கு வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புஸ்ஸி ஆனந்த் வருகையை யொட்டி மயிலாடுதுறை மேலவீதி பகுதியில் கட்சியினர் அலங்கார வளைவு அமைத்திருந்தனர்.

    அப்பகுதிக்கு சென்ற போலீசார் அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்து அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்ததாக கூறி, அதனை அகற்ற கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×