search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா போதையில் வாலிபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை
    X

    கஞ்சா போதையில் வாலிபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை

    • கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர்.
    • கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் சாலக்கரையில் நேற்று இரவு பில்லாலி தொட்டியை சேர்நத ஒருவரின் பிறந்தநாள் விழா மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திடீரென்று 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் வீச்சு அரிவாளுடன் மண்டபத்திற்கு வந்தனர்.

    அங்கு நடைபெற்ற ஒலிபரப்பான பாடலுக்கு கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர். தொடர்ந்து அங்கிருந்த நாற்காலிகளை சேதம் செய்து அனைவருக்கு அச்சமூட்டினர்.

    பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்த அவர்கள், திருவந்திபுரம் பகுதியில் இருந்து கடலூர் கம்மியம்பேட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். வழியில் சென்ற பொதுமக்களை கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ ஆதரவாளர் தி.மு.க. நிர்வாகி சன் பிரைட் பிரகாஷ் தனது வணிக நிறுவனத்தை மூடிவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சன் பிரைட் பிரகாஷ் மீது கத்தியால் தாக்கியதில் வாய், மூக்கு பகுதியில் கடுமையான வெட்டு காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மாநில தனியார் மருத்துவமனையில் சன் பிரைட் பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி தி.மு.க.வி னரிடையே பரவியது.

    இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் போலீசார் விசாரணை செய்ததில் இந்த 3 பேரும் பில்லாலி தொட்டி எய்தனூரை சேர்ந்த ரவுடிகள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தகவல் அறிந்த அய்யப்பன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் காயம் அடைந்த சன் பிரைட் பிரகாஷை நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி மாநில தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதை டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

    கஞ்சா போதையில் 3 இளைஞர்கள் கத்தியுடன் பொதுமக்க ளை மோட்டார் சைக்கிளில் சென்று அச்சுறுத்திய நிலையில் எம்.எல்.ஏ ஆதரவாளரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பொதும க்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×