search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர்களின் ஏ.டி.எம்., கார்டு மூலம் பல லட்சம் பணத்தை சுருட்டிய வாலிபர்
    X

    முதியவர்களின் ஏ.டி.எம்., கார்டு மூலம் பல லட்சம் பணத்தை சுருட்டிய வாலிபர்

    • கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார்.
    • விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம், பல்லடம் மற்றும் திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்கள் ஏ.டி.எம். கார்டை வைத்து பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு புகார்கள் வரவே அதிரடி விசாரணை நடத்தினர்.

    அப்போது திண்டுக்கல் மாவட்டம் மடூர், புகையிலைப்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 29) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார். அங்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை முதலில் குறி வைப்பார். அதன் பிறகு அவர்களுக்கு தானாக வந்து உதவி செய்வது போல உதவி செய்வார் . அப்போது பணம் எடுக்க தெரியாத முதியவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து, முதியவர்கள் தெரிவிக்கும் 4 இலக்க பின் நம்பரை புத்திசாலித்தனமாக தன் நினைவில் வைத்து கொள்வார்.

    அதன் பிறகு முதியவர்கள் கேட்கும் பணத்தை மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொடுக்கும் பன்னீர்செல்வம் முதியவர்களின் ஏடிஎம்., கார்டை அவர்களுக்கு திருப்பி கொடுக்க மாட்டார். அதற்கு பதிலாக அவர் ஏற்கனவே போலியாக வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை முதியவர்களிடம் கொடுத்து விடுவார்.

    முதியவர்கள் ஏ.டி.எம்.மில் இருந்து சென்ற பிறகு அவர்களின் கார்டை வைத்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுத்துள்ளார். இந்தநிலையில் தாராபுரத்தில் முதியவர்களின் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் தானாக எடுக்கப்படுவதாக தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் போலீசாருக்கு புகார்கள் வரவே, தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி நபரை தேடி வந்தனர்.

    தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பன்னீர்செல்வம் என்பதும் , முதியவர்களின் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மாஸ், தொப்பி அணிந்து டிப்-டாப்பாக வலம் வந்த அவர், அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×