என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் 176 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
- காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
- இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
திருப்பூர் :
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுப ட்டனர்.அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குட்கா புகையிலை பொருட்களை எடுத்து சென்று விற்பனையில் எடுபட்டது தெரிய வந்தது.தொடர்ந்து வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் ராம்நகர் குடோனில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதாக கூறியதை தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 176 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த ராகவன், நாகர்ஜுன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்