search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பூர் அருகே கார் மோதி  வாக்கிங் சென்ற பெண் பலி
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் அருகே கார் மோதி வாக்கிங் சென்ற பெண் பலி

    • காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
    • கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அவினாசியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மனைவி, தாய் மற்றும் குழந்தையுடன் வந்தார். இரவு தங்கிவிட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

    சேவூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது சாலிக்காட்டுப்பாளையம் அருகே சக்திநகரில் ஒரு பெண் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த பெண்ணின் மீது மோதி அவரை இழுத்துக் கொண்டே போய் ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். காரில் சிக்கிய பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம் அடைந்த 4 பேரும் கோபி ச்செட்டி ப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் மேற்கொண்ட விசா ரணையில் வாக்கிங் சென்று விபத்தில் சிக்கி பலியான பெண் சேவூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தாமணி என்பது தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×